சாயல்குடி: சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக வீடுகளில் மஞ்சள் பொடிகளை தெளித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கை கழுவுதல், கிருமி நாசினிகள் தெளிப்பு உள்ளிட்ட பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.இந்நிலையில் சாயல்குடி, கடலாடி பகுதிகளில் வீடுகளின் வாசல்களில் மஞ்சள் பொடிகளை துாவியும், வேப்பிலையை கயிறுகளில் கட்டியும் வைத்துள்ளனர். வீடுகளின் முன்புறம் பக்கெட்டுகளில் மஞ்சள் நீரால், உப்புக்கரைசல் வைத்து கைகளை கழுவி உள்ளே செல்கின்றனர். கிருமி நாசினியாக மஞ்சள் பொடியை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வில் அதிகளவு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.