பதிவு செய்த நாள்
27
மார்
2020
04:03
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா 144 தடை உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திருவிழா தேதி பின்னர் அறிவிக்கபடும் என, பங்குனி மாத முறைகாரர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடந்த 300 ஆண்டுகளாக பாரம்பரியமாக கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.திருவிழா நாளை மார்ச் 28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி, ஏப்.7ல் பொங்கலிடுதல், ஏப்.8ல்அக்னி சட்டி எடுத்தல், 11 ல் முளைப்பாரி திருவிழா, கரும்பாலை தொட்டில், சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் அறிவிக்கபட்டிருந்தது. கொரோனா அச்சத்தால்,நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், இதுகுறித்து கமுதி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, அரசு தடையாணை நீங்கிய பிறகு, மீண்டும் திருவிழா தேதி அறிவிக்கப்படும் என, பங்குனி மாத முறைகாரர் மாயகிருஷ்ணன் தெரிவித்தார்.விரதமிருந்த பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என, கமுதி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்அறிவித்தனர்.