கொரோனா அச்சத்தால் வேப்பிலை மஞ்சள் நீர், விளக்கு வைக்கும் மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2020 05:03
பழநி: பழநி அருகே வேப்பிலை மஞ்சள் நீர் விளக்கு வைத்து கிராமத்தை பொதுமக்கள் சுத்தப்படுத்துகின்றனர்.பழநி, விவாதம்பட்டியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதை தடுக்கும் வகையில் கிராமத்தில் இருந்து யாரும் வெளியேறாமல் சுய கட்டுப்பாடுடன் உள்ளனர். மேலும் வீடுகள் தோறும் மஞ்சள் நீர், வேப்பிலை நிறைத்த குடங்களை வாசலில் முன்பு வைத்துள்ளனர்.தெருக்கள் முழுவதும் மஞ்சள் கலந்த நீரை தெளித்து சுத்தமாக வைத்துள்ளனர். வெளியே சென்று வீட்டிற்கு வரும் நபர்கள் குடங்களில் வைத்துள்ள மஞ்சள் நீரால் கை, கால்களை சுத்தம் செய்த பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். வீடுகள் தோறும் வேப்பிலையை தோரணமாக கட்டியுள்ளனர்.பழநி சிவகிரிபட்டியில் பொதுமக்கள் தெருக்களில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விளக்கு, வேப்பிலை, மஞ்சள் நீரை பாத்திரங்களில் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.