பதிவு செய்த நாள்
28
மார்
2020
05:03
நாகப்பட்டினம்: கொரோனா பரவலை தடுக்க, ஈஸ்டர் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் விரதமிருக்கும் தவக்காலம், 26ல் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, ஏப்., 5ல் குருத்தோலை ஞாயிறு மற்றும், 12ல் ஈஸ்டர் பண்டிகை நடைபெறும். ஏப்ரல், 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. மாற்று ஏற்பாடாக, மக்கள் வீடுகளில் இருந்தே, திருப்பலியில் பங்கேற்கும் விதமாக, தேவாலய பாதிரியார்கள் சார்பாக, ஆன்லைன் வாயிலாக திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய பாதிரியார், டேவிட் தன்ராஜ் கூறியதாவது: வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெறும் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே, திருப்பலியில் பங்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து திருப்பலிகளும், குருவானவர் நிறைவேற்ற, பக்தர்கள், தேவாலய, வெப் டிவியில் ஆன்லைன் வாயிலாக பங்கெடுக்கலாம். தேவாலயத்திற்கு வரவேண்டாம். வீட்டில் இருந்தபடியே திருப்பலியில் பங்கெடுத்து, தியானித்து செபிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.