பதிவு செய்த நாள்
29
மார்
2020
03:03
சிவகங்கை, கொரோனா வைரஸ்’ பரவாமல் தடுக்கும் பொருட்டு பங்குனியில் நடக்க இருந்த சிவகங்கை, கொல்லங்குடி கோயில் பங்குனி விழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்’ பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஏப்., 14 வரை ஒரு இடத்தில் 5 பேருக்கு மேல் கூடினால், போலீசார் கைது செய்வார்கள். அதேபோன்று அத்தியாவசிய தேவையின்றி, ஊரடங்கு உத்தரவு காலத்தில் நகரை சுற்றிப்பார்க்கலாம் என டூவீலரில் சுற்றித்திரிந்தால், அவர்கள் மீது வழக்கு பதிவதோடு, டூவீலர்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இக்கால கட்டத்தில் திருவிழாவின் போது பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று நடப்பதாக இருந்த பங்குனி உத்திர தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு மார்ச் 28 ல் கொடியேற்றம் செய்து, ஏப்., 5 ல் தேரோட்டம் நடப்பதாக இருந்தது. இவ்விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. * கொல்லங்குடி: அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி சுவாதி பெருவிழா மார்ச் 31 அன்று காப்பு கட்டுடன் துவங்கி, ஏப்.,10 வரை சுவாமி புறப்பாடு, தேரோட்டம், தீர்த்தவாரி நடப்பதாக இருந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இத்திருவிழாவையும் ரத்து செய்வதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.