Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சள், வேம்பு கரைசல் வீதியில் ... பக்தர்கள் இல்லாமல் நெல்லிகுப்பத்தில் கிருத்திகை வழிபாடு பக்தர்கள் இல்லாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லையில் வேப்பிலை வேலி அமைத்த கிராமமக்கள்
எழுத்தின் அளவு:
எல்லையில் வேப்பிலை வேலி அமைத்த கிராமமக்கள்

பதிவு செய்த நாள்

29 மார்
2020
04:03

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, பல்வேறு கிராமங்களில் எல்லை மற்றும் பிரிவு சாலையை மறித்து வேப்பிலை கட்டி, வேலி அமைத்து, பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பாப்பாரப்பட்டி அருகே, ஒஜிஹள்ளி பஞ்., சிட்லகாரம்பட்டி, அண்ணா நகர் கொட்டாய் மற்றும் தித்தியோப்பனஹள்ளி பஞ்., குஞ்சிக்கொட்டாயில், கொரோனா வைரஸ் தடுப்பில், கிராம மக்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அப்பகுதி மக்கள், பாப்பாரப்பட்டி - பென்னாகரம் சாலையில் இருந்து, தங்கள் கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் பிரிவு சாலையின் எல்லையில், ஊருக்குள் யாரும் நுழைய முடியாதபடி வேப்பிலை கட்டி, தடை கட்டைகள், முள்வேலிகள் அமைத்து, தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எங்களால் முடிந்தளவு கிராமத்திற்குள்ளே பொதுமக்கள் இருக்கும் வகையில், ஊரின் எல்லை பகுதிகளை மூடியுள்ளோம். யாரும் ஊரைவிட்டு வெளியில் செல்ல முடியாது. வெளி நபர்களும் ஊருக்குள் அனுமதியில்லை. இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கிராமத்தில் தனிமைப்படுத்தி கொள்கிறோம். பெங்களூரிலிருந்து காரில் வருவோர் ஊருக்கு சர்வ சாதாரணமாக வந்து விடுகின்றனர். அவர்கள் மூலம், கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அதனால், இந்த தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா ஒழிப்பில், அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar