பதிவு செய்த நாள்
30
மார்
2020
03:03
திருப்போரூர் : திருக்கழுக்குன்றத்தில் முதியவர் ஒருவர், வேப்பிலை ஆடை அணிந்து கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதும் இதனால் பலர் பலியாகி வருவதும் தெரிந்ததே.இதற்காக, மத்திய, மாநில அரசு ஊரடங்குடன் பல தடுப்பு நடவடிக்கைகளைச் செய்து வருகிறது.மேலும், பலர் தங்கள் வீடுகளில் வேப்பிலை கட்டுதல், மஞ்சள் நீரை தெளித்தல், முக கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல் போன்ற தடுப்பு செயல்முறைகளை பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், இதை உணராத பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுதல், ஊரடங்கை பின்பற்றாமல் இருத்தல் என விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.இந்நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வேப்பிலை ஆடை அணிந்து, மஞ்சள் பூசியும், அதேபோல் தன் மிதிவண்டியில் வேப்பிலை கட்டியும், கொரோனா தடுப்பு குறித்த முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்தார். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. வெளிநாட்டில் பல உயிர் பலி ஏற்பட்டுள்ளது. நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என. திருக்குறள் வாசகத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.