கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2020 11:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில், கொரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் கொரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி நேற்று மிருத்தியுஞ்சய மகாயாகம் நேற்று நடைபெற்றது. இதனை பெருவுடையார்,பெரியநாயகி சந்தனம், திரவிய பொடி, பால், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சம்பா சாதம் மற்றும் மிளகு ரசம் படைக்கப்பட்டன. கலசத்தில் புனித நீர் வைக்கப்பட்ட ஜபங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் வெண்மிளகு, வெண்கடுகு கொண்டு சுத்தன்னம் நைவேத்தியம் பெருவுடையாருக்கு படைக்கப்பட்டது.