பதிவு செய்த நாள்
31
மார்
2020
11:03
பல்லடம்: வைரஸ் கிருமியை தடுக்க, சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நோய் தொற்றுக்கு காரணமாக உள்ள கொரோனா வைரஸ் கிருமியை தடுத்து, உலக மக்களை காக்க வேண்டி, பல்லடம் சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சிறப்பு வழிபாடு நடந்தது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு வழிபாட்டை நடத்தி கொடுத்தார். முன்னதாக, உலக மக்களை அழிவிலிருந்து மீட்கவும், நோய் தொற்றை பரப்பிவரும் வைரஸ் கிருமியை தடுக்கவும், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. 108 கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்ட நீரால், குரு பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பேரிடர் நீங்க, 30 தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை பதிகம் படிக்கப்பட்டது. அதேபோல், உலக நலன் வேண்டி, நவக்கிரகங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.