பெண்ணாடம்: ஊரடங்கு உத்தரவை மீறி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நேற்று ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில், அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, 6:00 மணியளவில், ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கூட்டமாக பலர் பங்கேற்றதோடு, அவர்கள் முகக் கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றவில்லை. தகவலறிந்து, பெண்ணாடம் போலீசார் விரைந்து வந்தனர். கோவில் கணக்கர் மலையப்பனிடம் விசாரித்தனர்.கோவிலை திறந்து திருமணம் நடத்த அனுமதி அளித்தது தவறு எனக் கூறி, அங்கிருந்தவர்களை கலைந்து போக செய்தனர்.