Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊரடங்கு உத்தரவை மீறி கோவிலில் 5 ... தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அகண்ட தீபம் அணைந்ததாக வதந்தி
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அகண்ட தீபம் அணைந்ததாக வதந்தி

பதிவு செய்த நாள்

31 மார்
2020
12:03

 திருப்பதி:திருமலை ஏழுமலையான் கோவிலில் எரிந்து வரும் அகண்ட தீபம் அணையவில்லை என, திருமலை ஜீயர்கள் தெரிவித்துள்ளனர். திருமலை மடத்தின், பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர், சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜர் இருவரும், திருப்பதியில் நேற்று அளித்த பேட்டி:திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்றப்பட்ட அகண்ட தீபம் அணைந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்ம தீபம், அகண்ட தீபம் இரண்டும் ஏற்றப்பட்டு வருகின்றன.காலை சுப்ரபாத சேவையின் போது ஏற்றப்படும் இந்த இரு தீபங்களும், இரவு ஏகாந்த சேவைக்கு பின் குளிர்விக்கப்பட்டு, நடை சாற்றப்படுகிறது. இதுவே, கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. திருமலை ஏழுமலையானுக்கு நடக்கும் கைங்கரியங்கள் குறையில்லாமல் நடத்தவே, வைணவ குரு ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்டது.  திருமலை மடம். இங்குள்ள ஜீயர்களின் பணி, ஏழுமலையான் கோயிலில் நடக்கும் கைங்கரியங்களில் குறைவு ஏற்படாமல் கவனித்து கொள்வது மட்டுமே. ஏழுமலையான் கோவிலில், அதிகாலை சுப்ரபாதம் முதல், இரவு ஏகாந்த சேவை வரை, அனைத்து சேவைகளும் ஒரு தடங்கலும் இல்லாமல், ஆகம விதிப்படி, தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை கடைபிடிக்கும் நோக்கோடு, பக்தர்களுக்கு மட்டும், ஏழுமலையான் தரிசனம் மறுக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கைங்கரியங்களும் வழக்கம் போல் பின்பற்றப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar