பதிவு செய்த நாள்
31
மார்
2020
01:03
மாமல்லபுரம் : பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்கு பின், மாமல்லபுரத்தில் மேம்பட்ட சுற்றுலாவை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், முற்றிலும் வீழ்த்தியது.
சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலை சுற்றுலா இடமான மாமல்லபுரத்திற்கு, ஆண்டு முழுதும், உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் வருவர். இதில், வெளிநாட்டவர், ஆகஸ்ட் - ஏப்ரல் மாதங்களில் வருகின்றனர்.பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், கடந்த அக்டோபரில், இங்கு முறைசாரா மாநாடாக சந்தித்து, சிற்பங்களை கண்டு களித்தனர்.சந்திப்பைத் தொடர்ந்து, உள், வெளிநாட்டுப் பயணியர், இங்கு அதிகம் குவிந்தனர். இதனால், சுற்றுலா மேம்பட்டு, பல மாதங்களாக, சுற்றுலா களைகட்டியது. இந்நிலையில், சீன நாட்டில் உருவான, கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பரவி, நம் நாட்டிலும், பரவுகிறது. இதை பரவாமல் தடுக்க, 24ம் தேதி முதல், தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல், 14ம் தேதி வரை, ஊரடங்கு நீடிப்பதால், இவ்வூர் முற்றிலும் முடங்கியுள்ளது.சீன அதிபர் வருகையால், சுற்றுலா மேம்பட்ட மாமல்லபுரம், வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கிய அவலமும் ஏற்பட்டுள்ளது.ஊரடங்கு முடிவிற்கு பின், மீண்டும், சுற்றுலா களைகட்டுவது சந்தேகமே என, இப்பகுதியினர் கவலையில் உள்ளனர்.