பதிவு செய்த நாள்
31
மார்
2020
02:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மக்கள் நலம் பெற வேண்டி தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, அருணாசலேஸ்வரர் கோவிலில் வழிபாட்டுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நேற்று, கொரோனா வைரஸ் ஒழிந்து, மக்களுடன் நலமுடன் வாழ வேண்டி, அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, கோவில் சுவாமி கருவறை எதிரில் சிறப்பு யாக குண்டம் அமைத்து, யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பின், அதில் வைக்கப்பட்ட புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், யாகபூஜையில் கோவில் சிவாச்சாரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.