பதிவு செய்த நாள்
01
ஏப்
2020
12:04
திருத்தணி : ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, திருத்தணியில் தங்கியிருக்கும் யாத்தீகர்கள். துப்புரவு பணியாளர்களுக்கு, முருகன் கோவில் சார்பில், தினமும், 100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பிரதமர் மோடி, வரும், 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும், முருகன் கோவிலும் மூடப்பட்டது.இந்நிலையில், திருத்தணியில் தங்கியிருக்கும் யாத்ரீகர்கள், நகரில் துாய்மை பணிகள் மேற்கொள்ளும் துப்புரவு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் உணவு கிடைக்காமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, முருகன் கோவில் நிர்வாகம், தினமும் குறைந்தபட்சம், 100 - 150 பேருக்கு உணவு வழங்க தீர்மானித்து, அதன்படி திருத்தணி - அரக்கோணம் சாலை மலைப்பாதை எதிரில் உள்ள கார்த்திகேயன் குடில்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டம், வரும், 14ம் தேதி வரை தொடரும் என, கோவில் தக்கார் ஜெய்சங்கர் தெரிவித்தார்.