மேல்மலையனூர், சிங்கவரம் கோவில்களில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2020 02:04
செஞ்சி: உலக நன்மைக்காக மேல்மலையனூர், சிங்கவரம் கோவில் களில் தன்வந்திரி யாகம் நடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கோவில்களில் உலக நன்மை வேண்டியும், நோய்கள் குணமாகவும் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தன்வந்திரி யாகம் நடத்தினார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். காலை 10 மணிக்கு தன்வந்திரி யாகம் நடந்தது. இதில் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் ராமு அறங்காவலர் குழு தலைவர் சரவணன் அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர், இந்து சமய அறநிலை துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.