பதிவு செய்த நாள்
01
ஏப்
2020
02:04
சேலம்: பங்குனி திருவிழா, இரு நாள் பூஜையுடன், நாளை நிறைவடைகிறது. சேலம், ஜாரி கொண்டலாம்பட்டியில், சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன், கடகடப்பான் கோவில்கள், அடுத்தடுத்து அமைந்துள்ளன. அங்கு, பங்குனி திருவிழா, கடந்த, 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கிய நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்டது. வரும், 14 வரை, ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், திருவிழாவை, வெகுவிமரிசையாக நடத்த முடியாத நிலை உள்ளது. அதனால், அறநிலையத்துறை அறிவுறுத்தல், ஊர்மக்கள் கூடி, இன்று, நாளை, பூஜை மட்டும் செய்து, பங்குனி திருவிழாவை நிறைவு செய்ய திட்டமிட்டனர். அதன்படி, கோவில் பகுதியில் கூட்டம் கூடாமல், மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.