காரைக்கால் மஸ்தன் சாகிப் வலியுல்லா தர்கா கந்தூரி விழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2020 02:04
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா தற்போது ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ரத பல்லாக்கு ஊர்வலம் புறப்பட்டு பின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 13ம் தேதி மின்சார சந்தனக்கூடு புறப்படுதல். சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மத்திய.மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் கந்தூரி விழா நடைபெறுவதற்கு கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. விழா எளிய முறையில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு நலன் கருதி கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 144 தடை உத்தரவை மீறி எவ்வித விழாவும் நடத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால் தற்போது கந்தூரி விழா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ். எஸ்.பி.வீரவல்லபன். ரகுநாயகன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.