திருவாடானை:பெரியகீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் ஏப்.,27ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கினர்.