செஞ்சி; உலக நன்மைக்காக மேல்மலையனுார். சிங்கவரம் கோவில்களில் தன்வந்திரி யாகம் நடந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமின்றி உலக மக்களின் நன்மைக்காவும், நோய் குணமாகவும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தன்வந்திரி யாகம் நேற்று முன்தினம் நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, தன்வந்திரி யாகம் நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு அறங்காவலர் குழுத் தலைவர் சரவணன் அறங்காவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது.விழுப்புரம்விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் காலை கணபதி, தன்வந்திரி ேஹாமங்கள் நடந்தது. பொதுமக்கள் கூட்டம் கூடாத வகையில் ஆலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்காக இந்த ேஹாமங்களை, ஆலய அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.