தருமபுரம் ஆதின மடத்தில் மக்களுக்கு கபசுரக் குடிநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2020 02:04
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதின திருமடத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் வழங்கினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மருத்துவ சேவையில் அளப்பரிய பணி யாற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்கள் விடுபட தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட 27 திருக்கோயில்களிலும் கடந்த மாதம் தொடங்கி சிறப்பு வழிபாடு கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழக முதல் வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ 11 லட்சம் வழங்கினார். இந்நிலையில், தருமபுரம் ஆதின திருமடத்தில் கொரோனா வைரஸ்சை எதிர்கொள்ளும் வகையில், மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவா மிகள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை கொடுத்து அருளாசி வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுர குடிநீரை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து தருமபுரம் மாரியம்மன் கோயில் தெரு, அச்சுதராயபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் 1000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.