Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநவமி: வேப்பம் பூமாலை ... ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு ஊரடங்கால் குறைந்த கங்கை மாசு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருமலை கோயிலில் ராமநவமி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
09:04

 திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில் உற்ஸவ மூர்த்திகளுக்கு நேற்று ஆஸ்தானம் நடந்தது.

திருமலையில் ஆண்டு தோறும் ராமர் ஜென்ம தினத்தன்று வழிபாடு நடத்தி வருகிறது தேவஸ்தானம்.அதன்படி நேற்று ராம நவமி உற்ஸவத்தை முன்னிட்டு காலை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ராமரை கோயிலில் உள்ள கல்யாண உற்ஸவ மண்டபத்தில் எழுந்தருள செய்து அவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.மாலை 6:௦௦ முதல் 7:௦௦ மணி வரை ஏழுமலையான் கோயில் தங்க வாயில் அருகில் சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ராமரை எழுந்தருள செய்து அவர்களுக்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது.

6 மணி நேர ஓய்வுதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் ஏற்படுத்தப்பட்ட கால கட்டத்தில் காலை5:00 மணிக்கு சுப்ரபாத சேவை துவங்கிஇரவு 8:00 மணிக்கு ஏகாந்த சேவையுடன் தினசரி கைங்கரியங்கள் நிறைவு பெற்று வந்தன.அப்போது பெருமாளுக்கு ஓய்வு என்பது பூரணமாக இருந்தது. அதன்பின் பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியதும் அவர்களின் தரிசனத்திற்காக இரவு ஏகாந்த சேவை 10:00 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் ஏழுமலையான் ஓய்வு நான்கு மணி நேரமாக குறைந்தது.திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கிய பின் நள்ளிரவு 12:00 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு 12:30 மணிக்கு கோவில் நடை சாற்றப்பட்டது.

மீண்டும் சுப்ரபாத சேவைக்காக அதிகாலை 2:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு வருகிறது.இதனால் ஏழுமலையான் ஓய்வு நேரம் வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்து விட்டது. தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழுமலையானுக்கு வழக்கமான பூஜைகள் தவிர்த்து தினமும் ஆறு மணி நேரம் ஓய்வு கிடைத்து வருகிறது.ஏப்., 14ம் தேதி வரை ஏழுமலையானுக்கு இந்த ஓய்வு நிரந்தரமாக கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar