வடமதுரை :வடமதுரை பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோயில் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.
நடப்பாண்டில் சமயபுரம் கோயிலில் கடந்த மார்ச் 8 அன்று துவங்கிய பச்சைப்பட்டினி விரதம் இன்று முடிவடைகிறது. நாளை காப்பு கட்டி சித்திரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் பக்தர்கள் நாளை (ஏப்.5) காலை 6:00 மணி முதல் 8:00 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே சமயபுரம் மாரியம்மன் படத்தை வைத்து தயிர் சாதம், இளநீர், கஞ்சி, நீர்மோர், பானகம் உள்ளிட்டவற்றை படைத்து மாலை மற்றும் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.