நாமக்கல்: நாமக்கல், தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ராம நவமி விழா, சாய் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ராம நவமி விழா, சாயி ஜெயந்தி விழா நடந்தது. கோவில் நிர்வாகி சதீஷ்ராஜன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் பங்கேற்றனர். அதில், பாராயண சங்கல்ப வேள்வி நடத்தப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வேண்டி, சாயி சத்சாயித பாராயண சங்கல்ப வேள்வி தினசரி நடந்து வருகிறது. மேலும், சாயி நாம ஜப வேள்வி, சர்வசித்தி சுவாமிகள் திருவடி பாராயணம் உள்ளிட்ட வேள்விகள் நடந்து வருகின்றன. அதில், சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு பக்தர்களை அனுமதிக்கவில்லை.