பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று பக்தர்களின்றி பிரதோஷ பூஜை நடந்தது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, பங்குனி மாத, வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா எதிரொலியால், கோவில் மூடப்பட்டதால், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பிரதோஷ பூஜை செய்தனர்.