வாழப்பாடி: பேளூரில், சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், மூன்றாவது நாளாக நேற்று கொரோனா தொற்று பரவாமல் இருக்க மஞ்சள், வேப்பிலை கரைசல் தெளிக்கப்பட்டது. பேளூரில் மஞ்சள் பொடி மற்றும் வேப்பிலை நன்கு அரைக்கப்பட்டு, அதை நீரில் கலந்து மூன்றாவது நாளாக நகரின் முக்கிய வீதிகளில், மினி வேன் மூலம் தெளிக்கப்பட்டது.