ராமநாதபுரத்தில் பக்தர்களின்றி நடந்த பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2020 02:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா பக்தர்களின்றி நடந்தது.
பங்குனி உத்திர விழாவில் முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுவாமிக்கு பால்குடம், காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கொரோனா ஊரடங்கால் கோயில்களில் பக்தர்களின்றி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தது. வழிவிடு முருகன் கோயில், குண்டுக்கரை முருகன் கோயில், குயவன்குடி சுப்பையா முருகன் கோயில், கேணிக்கரை பாலசுப்பிரமணியன் கோயில் மற்றும் பெருவயலில் உள்ள ரெணபலி முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.