அனைத்து தரப்பினரும் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நெகிழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2020 02:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் பகுதியில் பொதுமக்கள் அகல் விளக்கேற்றி கொரோனாவை ஒற்றுமையுடனிருந்து வெளியேற்றுவோம் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.
நாட்டிலிருந்து கொரோனாவை விரட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி டார்ச் லைட் அடித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் ஒருபகுதியாக அரகண்டநல்லூரில் பலரும் வீடுகளில் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் வாசிம்ராஜா தனது குடும்பத்தினருடன் அகல் விளக்கேற்றினார். காங்கிரஸ் வட்டார தலைவர் முருகன் கலந்து கொண்டார். அதேபோல் திருக்கோவிலூர் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் வீடுகளில் மின் விளக்கை அணைத்து அகல்விளக்கு ஏற்றி பொதுமக்கள் வீதியில் வந்து டார்ச் லைட் அடித்து பிரதமர் மோடியின் கூற்றுக்கு ஏற்ப நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவை உறுதியுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம் என்ற உணர்வை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.