ரிஷிவந்தியம்; பாசாரில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமானோர் அலகு குத்தி தேர் இழுத்தல், காவடி துாக்குதல், வானலியில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வடை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வினை பார்க்க சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கூடுவது வழக்கம்.இந்தாண்டு கடந்த மார்ச் 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திருவிழா விமர்சையாக நடைபெறாமல் கூட்டமின்றி, எளிமையாக நடந்தது.உற்சவர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு சுவாமி கோவிலின் வெளி பிரகாரத்தில் வைக்கப்பட்டது.