விழுப்புரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2020 03:04
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா நடந்தது.விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், கொடியேற்றம், காப்பு அணிவித்தல் மற்றும் மாலை 6:30 மணியளவில் 9 நாட்கள் உற்சவ உட்கோவில் பிரகாரம் வலம் நடந்தது.தொடர்ந்து, கடந்த 5ம் தேதி மாலை 6:00 மணியளவில் பால்குடம் எடுத்தல், மூலவருக்கு அபிேஷகமும், நேற்று 6ம் தேதி காலை 7:00 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.ஊரடங்கு உத்தரவால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.