பதிவு செய்த நாள்
07
ஏப்
2020
03:04
கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழா நிறுத்தப்பட்ட நிலையில் பூஜை மட்டும் நடத்தப்பட்டது.
கோத்தகிரி சக்திமலை கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா அன்னதானத்துடன், சிறப்பாக நடத்தப்படுகிறது. இதில், கோத்தகிரி வட்டாரத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டு, கொரோனா தாக்கம் காரணமாக, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், விழா தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீசக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் முன்னிலையில், கோவில் கமிட்டியினர், ஐந்து பேர் மட்டும் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணியளவில், கோவில் பூசாரி ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தினார். பிறகு, பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதை அடுத்து, கோவில் நடை சாற்றப்பட்டது.