அன்னூர்: அன்னூர் அருகே, கிராமத்துக்குள் வர வேப்பிலையால் தடை ஏற்படுத்தி கிராம மக்கள் வைத்துள்ளனர். அன்னூரில், ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்னூர் தாலுகாவில், 85 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். எனவே, அன்னூர், அவினாசி ரோட்டிலுள்ள ஊத்துப்பாளையம் மக்கள் கிராமத்திற்குள் வெளியூர் நபர்கள் வர தடைவிதித்து, ஊர் வாசலில் வேப்பிலையால் தோரணம் போல் அமைத்து தடை செய்துள்ளனர். மேலும், உள்ளூர் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்று விட்டு ஊருக்குள் திரும்பி வரும்போது கைகளைக் கழுவிவிட்டு வர வேண்டும் என்பதற்காக ஊர் வாசலில் தொட்டியில் தண்ணீரும், சோப்பும் வைத்துள்ளனர்.