பதிவு செய்த நாள்
07
ஏப்
2020
03:04
தர்மபுரி: தர்மபுரி சிறுமியர் இருவர், யோகாசனம் செய்து அகல் விளக்குகளை ஏற்றினர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்த கடந்த, 5 இரவு, 9:00 முதல், 9:09 மணி வரை, மக்கள் தங்கள் வீடுகளில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மொபைல்போன் வெளிச்சத்தை காண்பிக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு நாடு முழுவதும், மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன்படி, தர்மபுரி, சித்தேஸ்வரா நகரை சேர்ந்த வெங்கடேசன், 45, யோகா ஆசிரியை ஜெயபிரியா, 37, தம்பதியினரின் குழந்தைகள், ஹர்ணி, 13, சஸ்மிதா, 7, ஆகியோர், யோகாசனம் செய்து, கொரோனாவுக்கு எதராக ஒளியேற்ற விரும்பினர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வீட்டில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, சமூக இடைவெளியில், சக்ராஸனம், பத்மாஸனம், ஏகபாத சிரசாஸ்னம், கபோடு ஆசனம் ஆகிய நான்கு விதமான ஆசனங்களை செய்து, தீபவிளக்குகளை ஏற்றினர்.