மதுரை, சிலார்பட்டி கிராமத்தில் உள்ள காலதேவியம்மன் கோயில் கோபுரத்தில் நேரமே உலகம் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த காலதேவியம்மனால் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியுமாம். 51 அடி உயரத்தில் முறம் போன்ற அமைப்பில் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது கோயில் கோபுரம். அரிசியைப் புடைக்கும் போது, எப்படி தேவையில்லாத கல், குப்பை எல்லாம் வெளியே போகுதோ, அதேபோல் நம் கெட்ட நேரமும் வெளியே போகத்தான் இந்த வடிவமாம். மாலை 6 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை (இரவு நேரம் முழுவதும்) நடை திறந்தே உள்ள அபூர்வமாகக் கோயில் இது!