துாத்துக்குடி :முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவில் கடற்கரை நேற்று பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.