Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவெட்டி அங்காளம்மனுக்கு சித்ரா ... திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலம்! திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா நாளை மின் அலங்காரத் தேர்பவனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2012
10:05

மோகனூர்: புனித செபஸ்தியார் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நாளை (மே 8), மின் அலங்காரத் தேர்பவனி நடக்கிறது. மோகனூர், புதுத்தெருவில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று மாலை 6 மணிக்கு, எஸ்.பி.பி., காலனி பங்குதந்தை ஜெயசீலன் தலைமையில் கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் துவங்கியது. இன்று (மே 7) மாலை 6 மணிக்கு, பரமத்தி பங்குதந்தை பீட்டர் பிரான்சிஸ் தலைமையில், நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடக்கிறது. நாளை (மே 8) மாலை 6 மணிக்கு, நாமக்கல் மறைமாவட்ட முதன்மை குரு சவரி தலைமையில், திருவிழா திருப்பலி, இரவு 7 மணிக்கு பொங்கல் மந்திரிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, இரவு 8 மணிக்கு ஆடம்பரத் தேர்பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித செபஸ்தியார் எழுந்தருளி பவனி வந்து, பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். வழிநெடுகிலும் பக்தர்கள் புனிதருக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபடுகின்றனர். மே 9ம் தேதி காலை 7 மணிக்கு பங்குப்பணியாளர் மரிய பாக்கியம் தலைமையில், திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar