Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடசென்னை வேங்கடேச பெருமாள் கோயில் ... வீரபாண்டி கோவிலில் தூக்குத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி சுவாமிகளுக்கு ஆழ்வார்குறிச்சியில் வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மே
2012
10:05

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சிக்கு நேற்று விஜயம் செய்த சிருங்கேரி சுவாமிகளுக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆழ்வார்குறிச்சிக்கு இரண்டு நாள் விஜயமாக சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள் நேற்று மாலை 6.40 மணியளவில் விஜயம் செய்தார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மருத்துவமனை வாசல் முன்பு சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் அ.கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, அமால்கமேஷன் குரூப்ஸ் ரெப்கோ நிறுவனம் என்.சிவசைலம், பவானி சிவசைலம், சேதுவெங்கட்ராமன், ராஜலெட்சுமி சேதுவெங்கட்ராமன், சீதா வெங்கட்ரமணி, கோயம்புத்தூர் நாராயணன் (எ) குமார், லெட்சுமிநாராயணகுமார், கல்யாணி, ராதா, அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் கிராம மஹா ஜனங்கள் அலங்கரிக்கப்பட்ட யானை முன்வர பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.வரவேற்பு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமநாதன், உமா ராமநாதன், பரமகல்யாணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் தேவராஜன், பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி தனி அலுவலர் சுந்தரம், சிம்சன் ராஜூ, பரமகல்யாணி வைரம் பட்டை தீட்டும் நிறுவன மேலாளர்கள் நாடாக்கண், ராதாகிருஷ்ணன், பரமகல்யாணி மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணன், கடையம் யூனியன் சேர்மன் சீனிவாசுகி, சிவசைலம் அத்ரிகலா நிலைய நடுநிலைப்பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், பரமகல்யாணி கல்வி நிறுவனத்தினர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முக்கூடல் ஒ.கே.சி.வெங்கடேஷ் குழுவினரின் நாதஸ்வர சிறப்பு கச்சேரியும், சிறப்பு வாத்தியங்களும், தேவாரம் வேதபாராயணங்களுடன் வரவேற்றனர். பின்னர் பரமகல்யாணி கல்யாண மண்டபத்தில் தூளி பாத பூஜையும், பின்னர் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார். இரவு சிருங்கேரி சுவாமிகள் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்தினார்.இரண்டாம் நாளான இன்று (8ம் தேதி) காலை 9.30 மணியளவில் சுவாமிகள் சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலுக்கு விஜயம் செய்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு பரமகல்யாணி மண்டபத்தில் ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜையும், மஹா சுவாமிகள் தரிசனமும், பாத பூஜையும், பிக்க்ஷõ வந்தனமும் நடக்கிறது.மாலை 4 மணியளவில் சுவாமிகள் ரவணசமுத்திரம் விஜயம் செய்கிறார். இரு நாட்களும் சுவாமிகளை வரவேற்கும் பணியில் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் அ.கிருஷ்ணமூர்த்தி, அமால்கமேஷன் ரெப்கோ நிறுவனம் என்.சிவசைலம், கோயம்புத்தூர் நாராயணன் (எ) குமார், அண்ணல் அனந்தராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் ஆழ்வார்குறிச்சி மஹா ஜனங்கள் செய்துள்ளனர்.சுவாமிகள் வருகையை முன்னிட்டு ஆழ்வார்குறிச்சியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே அபிராமம் பாதயாத்திரை குழுவின் சார்பில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்:  கேதார்நாத் கோயில் நாளை மே 10 ம் தேதி பக்தர்கள் வழிபாட்டிற்கு வேத முழக்கத்துடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த  அம்மன் ரத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar