பதிவு செய்த நாள்
21
ஏப்
2020
12:04
மதுரை: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை இருப்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் நடந்த பிரதோஷ வழிபாட்டில், கோயில் ஊழியர்கள், அம்மையப்பரை தோளில் சுமந்து சென்றனர்.
கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று பிரதோஷம் என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த பிரதோஷ வழிபாட்டில், கோயில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.