Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெற்றியூர் பாகம்பிரியாள் ... வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் பாதயாத்திரை ரத்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நகரத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் அன்னதான திட்டம் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் அன்னதான திட்டம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
11:04

அவிநாசி: கோவில்களில், அன்னதான திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்திடம் இருந்த உணவு தயாரிப்புக்கு தேவையான பொருட்கள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தினசரி, 50 முதல், 100 பேருக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது. பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில்லை. அன்னதானம் வழங்கும் திட்டமும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்னதானத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், முன்கூட்டியே கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அப்பொருட்களை அந்தந்த கோவில் நிர்வாகத்தினர், தங்கள் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் வசம் ஒப்படைக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. வருவாய்த்துறையினர், தன்னார்வலர்கள் மூலம், அப்பொருட்களை வழங்கி, உணவு சமைத்து, ஏழை, எளியோருக்கு வழங்கி வருகின்றனர். சில இடங்களில், இப்பணியில் தொய்வு தென்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கத்தினர், தூய்மைப் பணியாளர்கள், ஆதரவற்றோர், வீடில்லாமல் ரோட்டோரம் வசிப்போருக்கு, நன்கொடை மூலம் மளிகை பொருட்கள் பெற்று, உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்தினருடன் ஒருங்கிணைந்து, வருவாய்த்துறையினர் செயல்படும் பட்சத்தில், தங்களிடம் உள்ள மளிகைப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, ஏழைகளின் பசி தீர்க்க முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar