Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தாதி படித்தால் சிவனருள் ... வளர்ச்சி தரும் வராகப்பெருமாள் வளர்ச்சி தரும் வராகப்பெருமாள்
முதல் பக்கம் » துளிகள்
கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வம்
எழுத்தின் அளவு:
கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
05:04

மதுரை வண்டியூர் மாரியம்மன் கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வமாகத் திகழ்கிறாள். காவல் தெய்வமான துர்கையம்மன் கோயில் மதுரை நகரின் கிழக்கு எல்லையில் இருந்தது. மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வழிபடுவர். வறட்சி ஏற்பட்ட காலத்தில் மழை வரம் வேண்டி வழிபட்டதால் காலப்போக்கில் மாரியம்மனாக கருதி வழிபடத் தொடங்கினர்.  


பார்வதியின் வெவ்வேறு வடிவங்களான மாரியம்மன், துர்கை இருவரும் கருவறையில் ஒரே சிலை வடிவில் மூலவராக உள்ளனர். சிரித்த முகத்துடன் இருக்கும் அம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். இடது காலை தொங்கவிட்டும், வலதுகால் மடித்த நிலையிலும் உள்ளது.  காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.  பக்தர்கள் தங்களின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் போது, பூக்கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன் முதல்பூஜை இங்கு நடத்தப்படுகிறது. இங்கு தரப்படும் தீர்த்தத்தை பருகினால் அம்மை குணமாகும். 


கண்நோய் தீர வெள்ளியால் ஆன கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர். தோல் வியாதிக்கு அகல உப்பும், மிளகு செலுத்துகின்றனர். பேச்சியம்மன், அரசமரத்தின் அடியில் விநாயகர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. 


செல்வது எப்படி: மதுரை பெரியார் நிலையம் –  தெப்பக்குளம் செல்லும் சாலையில் 4 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி வெள்ளி, தைவெள்ளி, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு 0452 – 231 1475
அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் ... மேலும்
 
temple news
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை ... மேலும்
 
temple news
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, ... மேலும்
 
temple news
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, ... மேலும்
 
temple news
புளிய மரத்தை பார்த்தால், சிறு வயதில் நாம் கேட்ட கதைகள் நினைவுக்கு வரும். புளிய மரத்தில் பேய் இருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar