பிரயாக்ராஜ்: உ.பி., பிரயாக்ராஜ் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, கடந்த ஒரு மாததிற்கு மேலாக தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங், சுண்ணாம்பு பவுடர் போடுதல், வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொரோனா வைரஸ் ஒழிப்பில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், கோவில் பூசாரி பாதங்களை கழுவி, மரியாதை செலுத்தினார்.