Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோன்பு கடைப்பிடிக்கும் ... ரம்ஜான் ஆலோசனைக் கூட்டம் ரத்து
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகருக்கு நிவாரண உதவி பூசாரிகள் சங்கம் பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2020
03:04

பல்லடம்: தஞ்சாவூரில் கோவில் அர்ச்சகர்களுக்கு, இஸ்லாமிய அறக்கட்டளையினர், நிவாரண உதவிகள் வழங்கியதற்கு, கோவில் பூசாரிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டுமே நடந்து வருவதால், அர்ச்சகர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், தஞ்சாவூர் இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில், கோவில் அர்ச்சகர்களுக்கு, முஸ்லிம்கள் நிவாரண உதவி பொருட்கள் வழங்கினர். அதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியதாவது: ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டதால், அர்ச்சகர்கள் போதிய வருவாய் இன்றி, குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்து அறநிலைத்துறை செய்யக்கூடிய பணியை, இஸ்லாமியர்கள் செய்தது வரவேற்கத்தக்கது. மூன்று வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்களுக்கு, உதவும் எண்ணம் உள்ள நிலையில், மூன்று மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கையை எண்ணி எடுத்து செல்லும் அறநிலைத்துறைக்கு அந்த எண்ணம் வராதது வருத்தத்துக்கு உரியது. கோவில் பூசாரிகளின் நிலை குறித்து, அறநிலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar