Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் ... முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி கோயில் பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
எழுத்தின் அளவு:
இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2020
11:04

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.

● நல்லெண்ணம் என்னும் நறுமணம் நாலாபுறமும் பரவினால் உலகம் நன்மை பெறும்.
● ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட ஒரு நல்ல செயலில் ஈடுபடுவது நல்லது.
● வாழ்க்கை என்ற நாணயத்திற்கு இன்பம், துன்பம் என இரு பக்கங்கள் உண்டு.
● மற்றவர் துன்புறுத்தினாலும் தீங்கு செய்ய விரும்பாதவனே நல்ல மனிதன்.
● ஒவ்வொரு செயலுக்கும் ஈடான விளைவு அதற்குரிய காலத்தில் வந்து சேரும்.
● விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும்.
● எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன்.      
● உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் கருது.      
● தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைவான்.
● காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டும் கசப்பது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கும்.     
● இயற்கையின் அழகில் ஈடுபட்டு அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள்.          
● கடவுளை ஆராய முயற்சிக்காதே. நம்பிக்கையும், ஆழ்ந்த அன்பும் இருந்தால் அவரை அடைய முடியும்.      
● உலகெங்கும் இருக்கின்ற தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.      
● பிறரிடம் யாசிப்பவனை விட அவனுக்கு இல்லை என மறுப்பவனே மிக இழிவானவன்.      
● கடவுளின் இருப்பிடமான உடல், மனதை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.  
● மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது.
● அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.       
● பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரிவது கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும்.      
● நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம். அவனை யாரும் விரும்ப மாட்டார்கள்.
● கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நாம் செய்ய வேண்டிய நியாயமான பிரார்த்தனை.       
● சுயநலமற்ற சேவையில் ஈடுபடுவது ஒன்றே மனம் அமைதி பெறுவதற்கான வழி.
● எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகி விடும்.      
● பிறருடைய கருத்தை மதிக்கப் பழகுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே நற்பண்பு.      
● பூமிக்கு வரும் போது  எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது. - சொல்கிறார் சாய்பாபா

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar