Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எந்தெந்த கோவிலில் இலவச திருமணம்? மதுரை மீனாட்சி கோயிலின் பட்டருக்கு கொரோனா தவறான தகவல் மதுரை மீனாட்சி கோயிலின் பட்டருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர்களுக்கு நிவாரணம் அளிக்க முதன்மை செயலர் உத்தரவு
எழுத்தின் அளவு:
அர்ச்சகர்களுக்கு நிவாரணம் அளிக்க முதன்மை செயலர் உத்தரவு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2020
01:04

திருப்பூர்: ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோவில் பூஜாரிகளுக்கு, கடன் வாங்கியாவது, கொரோனா நிவாரணம் வழங்க வேண்டுமென, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோவில் பூஜாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சார்யார்கள், வருவாய் இழந்து தவிக்கின்றனர். எனவே, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பூஜாரிகள், அர்ச்சகர், பட்டாச்சார்யார்களுக்கு, தலா, 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.செயல் அலுவலரின் கட்டுப்பாட்டில் இல்லாத,ஒரு கால பூஜை திட்டத்தில் உதவிபெற்ற கோவில் பூஜாரிகளுக்கும், நிவாரணம் வழங்க, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு முதன்மை செயலர் பனீந்திரரெட்டி, அறநிலையத்துறை இணை கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோவில்களில்பூஜை செய்து வரும், 8,340 பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, வருவாய் இழந்து தவிக்கும், பூஜை திட்ட கோவில் பூஜாரிகளுக்கும், கொரோனா நிவாரணமாக, ரூ.1,000 வழங்கப்பட வேண்டும். உதவி கமிஷனர்கள், இப்பணியை மேற்கொள்ள வேண்டும். எனவே, கமிஷனர் பொது நிதியில் இருந்தோ, நிதி வசதியுள்ள பெரிய கோவில்களில் இருந்து கடனாக பெற்றோ, ஒரு காலபூஜை கோவில் பூஜாரிகளுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும். பிற திட்டங்களில் நிவாரண உதவி பெறாத, ஒருகால பூஜை திட்ட கோவில் பூஜாரிகளுக்கு, ஓரிரு நாட்களுக்குள், 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கி, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar