Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ... அன்னூரில் ஆதரவற்றோருக்கு அர்ச்சகர் உதவி அன்னூரில் ஆதரவற்றோருக்கு அர்ச்சகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைதீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வைதீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2020
10:04

வைதீஸ்வரன் கோவில்: வைத்தியநாத சுவாமி கோயில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன குருமகா சந்நிதானம் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவ கிரகங்களில் செவ்வாய் பகவான் மற்றும் தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சுவாமி வைத்தியராக எழுந்தருளியுள்ள இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு, இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை யை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க வைத்தியநாதசுவாமி கோயிலில் மாதம்தோறும் கார்த்திகை நாளன்று வள்ளி, தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சித்திரை மாத கார்த்திகை திருநாளான இன்று வள்ளி தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமியை அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திரவிய பொடிகள், பால், சர்க்கரை, தேன், பஞ்சாமிர்தம், பழங்கள், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகமும், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனையும் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. ரமேஷ் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அபிஷேக, ஆராதனையில் தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. கார்த்திகைப் வழிபாட்டில் தருமபுரம் ஆதீன திருமடம் மற்றும் கோயில் சிப்பந்திகள் மட்டும் கலந்துகொண்டு சமூக இடைவெளி விட்டு நின்று செல்வ முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் சிப்பந்திகள் அனைவருக்கும் தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் கபசுர குடிநீர் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar