Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிக்கல் சிங்காரவேலருக்கு அபிஷேக ... திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அபிஷேகம் திருநள்ளாறு சனீஸ்வரருக்கு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அட்சய திரிதியை: அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
எழுத்தின் அளவு:
அட்சய திரிதியை: அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

பதிவு செய்த நாள்

26 ஏப்
2020
10:04

அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.

* மகாலட்சுமி தாயே!
திருமாலின் மார்பில்
உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே!
ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில்
உறைந்திருப்பவளே!
மதுர வல்லித் தாயே!
உன்னைப் போற்றுகிறோம்.

* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே!
குலமாதர் போற்றும்
குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே!
நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு

அளிப்பவளே! உன் பாத
மலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே!
அருள் நெஞ்சினர்உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே!

உன் கடைக்கண்
பார்வையால் எங்கள் இல்லம்
செழித்திருக்கட்டும்.
எங்களுக்கு ராஜயோக
வாழ்வைத் தந்தருள்வாயாக.

* பூங்கொடியாகத் திகழ்பவளே!
அலமேலு மங்கைத்தாயே!
மூவரும், தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே!
பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே!
அஷ்டஐஸ்வர்யங்களையும்வாரி வழங்குவாயாக.

* முதலும் முடிவும் இல்லாதவளே!
ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத்
தாங்கும் தயாபரியே!
மகாவிஷ்ணுவின்
இதயக்கமலத்தில்
வாழ்பவளே! நிலவு போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.

* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே!
செவ்வானம் போல சிவந்த மேனி கொண்டவளே!
குறையில்லாத வாழ்வு
தரும் கோமளவல்லியே!
செங்கமலத் தாயாரே!
அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!

* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே!
வரம் தரும் கற்பகமே!
சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே!
லோகமாதாவே! உன்
அருளால் இந்த உலகமெல்லாம் செழித்தோங்கட்டும்.
உயிர்கள் எல்லாம்
இன்புற்று வாழட்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar