* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ளுங்கள். * வெட்கத்தை இழந்த மனிதன் நேர்மையற்ற மோசடிக்காரனாகி விடுகிறான். * நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே இறைவனிடத்தில் சிறந்தவர் ஆவர். * நாக்கில் நேர்மை இருந்தால் இதயமும் நேர்வழியில் செல்லும். * செயலில் ஈடுபடும் முன் அதன் முடிவு நன்மை தருமா எனச் சிந்தியுங்கள். * ஒழுக்கமுள்ளவனாக இருங்கள். மக்களில் நீங்களே சிறந்தவராக இருப்பீர்கள். * விரோதிகளை அதிகம் வெறுக்காதீர்கள். அவர்களும் ஒருநாள் நண்பராகலாம். * ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பொன்மொழிகள்