பதிவு செய்த நாள்
12
மே
2020
05:05
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. ஆனால் உங்கள் ராசிக்கு புதன் ஆட்சி நாயகன் என்பதாலும், செவ்வாய், சுக்கிரன், குரு, சனி நட்பு கிரகம் என்பதால் கவலை கொள்ள தேவை இல்லை. இடையூறுகள் வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வர்.
குருவால் மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு ஏற்படலாம். ஆனால் அவரது 7ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும். இதனால் பண வரவு கூடும். தேவைகள் நிறைவேறும். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் சுக்கிர பலத்தால் பெண்கள் உறுதுணையாக இருப்பர். அவர்களால் நன்மை கிடைக்கும். பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். மே 24க்கு பிறகு புதனால் வீட்டினுள் சில பிரச்னைகள் வரலாம். அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீண் விவாதங்களை தவிர்த்து கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
பெண்கள், சகோதரிகளால் நன்மை ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். ராகுவால் உறவினர் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். சிலர் வெளியூரில் தங்க நேரிடலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறைவிருக்காது. உடல்நிலை சுமாராக இருக்கும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள், பெண்களுக்கு சாதகமாக இருப்பதால் முக்கிய பொறுப்புகளை அவர்களின் வசம் ஒப்படைப்பது நல்லது. மாத முற்பகுதியில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் அதிக லாபத்தை தரும்.
* ஐ.டி., துறையினர் மாத முற்பகுதியில் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். முக்கிய கோரிக்கைகளை ஜுன் 4க்குள் வைக்கலாம்
* மருத்துவர்கள் ஜுன் 4வரை சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* ஆசிரியர்கள் குருவின் 7ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளதால் மேன்மை காண்பர். வளர்ச்சி காண்பர். சக ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனைக் காண்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.
* கலைஞர்கள் ஸ்திரத்தன்மையில் இருப்பர். சுக்கிரனால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜுன் 4க்கு பிறகு முயற்சியில் தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம்..
* விவசாயிகளுக்கு வருவாய்க்கு குறைவிருக்காது. கிழங்கு வகைகள், நிலக்கடலை, மற்றும் பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தைக் காணலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குருவின் பார்வையால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு திடீர் பணவிரயம் ஏற்படலாம். சனி, ராகுவால் வீண் அலைச்சல் அதிகரிக்கும் சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூரில் தங்க நேரிடும்.
வியாபாரிகள் களவு கொடுக்க நேரிடும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம் கவனம்.
* தரகு, கமிஷன் தொழிலில் சுதந்திரமற்ற நிலையைச் சந்திப்பர். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
* அரசு பணியாளர்கள் திடீர் இடமாற்றம், பதவி மாற்றத்தை சந்திக்க வாய்ப்புண்டு.
* தனியார் துறை பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
* வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளை நடத்தும் போது கூடுதல் கவனம் தேவை.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். வேலையில் பொறுமை தேவை.
* அரசியல்வாதிகள் அளவுக்கு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
* விவசாயிகளுக்கு கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் சுமாராக இருக்கும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே வளர்ச்சி உண்டாகும்.
நல்ல நாள் மே 17,18,19,20,21,25,26,29,30 ஜுன் 5,6,7,8,14.
கவன நாள்: மே14, ஜுன் 9,10சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்:
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம்
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்