Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: குழந்தை பாக்கியம் மீனம்: போட்டியில் வெற்றி மீனம்: போட்டியில் வெற்றி
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கும்பம்: சுக்கிரனால் நன்மை
எழுத்தின் அளவு:
கும்பம்: சுக்கிரனால் நன்மை

பதிவு செய்த நாள்

12 மே
2020
05:05

இந்த மாதம் மே24 வரை புதன் அனுகூலமான பலன்களைத் தருவார். சுக்கிரன் ஜுன் 4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். மேலும் சனி, கேது மாதம் முழுவதும் நன்மையளிப்பர்.

தற்போது மிதுன ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன்4ல் வக்கிரம் அடைந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொன், பொருள் சேரும். ஆற்றல் மேம்படும். சகோதரிகள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதன் 4ம் இடத்தில் இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தம்பதியிடையே அன்பு மேலோங்கும். மே 24க்கு பிறகு எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சகோதர வகையில் பணஉதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின் தொல்லையில் இருந்து விடுபடுவர். தோழிகள் உதவிக்கரம் நீட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். நல்ல பணப்புழக்கத்தை காண்பீர்கள். மே 24க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம்.  பொறுமையும் நிதானமும் தேவை. அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் சீரான வளர்ச்சி காண்பர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் கூடுதல் லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு பழைய கடன் அடைபடும். தொழில் வளர்ச்சி முகமாக அமையும்.
* தரகு, கமிஷன் தொழிலில் போட்டியாளர்களின் இடையூறு மறையும்.
* தனியார் துறை பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சிறப்பான முடிவு கிடைக்கப் பெறுவர்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடை இருக்காது. விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* பொதுநல சேவகர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். நற்பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வராது.
* கலைஞர்களுக்கு சுக்கிரன் பலமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ். பாராட்டு வந்து சேரும்.
* விவசாயிகள் பாசிப்பயறு, எள்,கொள்ளு, துவரை, பழ வகைகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கப் பெறுவர்.
 கால்நடை வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் பெறுவர். மே 24க்கு பிறகு சிரத்தையுடன் படிப்பது நல்லது.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மே 24க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக திடீர் பயணமும் ஏற்படலாம்.
* வியாபாரிகளுக்கு சூரியனால் பெண்கள் வகையில் தொல்லைகள் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
* அரசு பணியாளர்கள் வேலையில் மட்டும் அக்கறை செலுத்தவும். திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு மே 24க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.
* மருத்துவர்கள் மே 24க்கு பிறகு  முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஆசிரியர்கள் வேலைப்பளுவைச் சந்தித்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைக்காமல் போகாது.
* அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடிகொண்டிருக்கும்.
* விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்.

நல்ல நாள்: மே 15,16,20,21,27,28,29,30, ஜுன் 5,6,7,8,11,12,13
கவன நாள்   மே31, ஜுன்1 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: கருப்பு, வெள்ளை.

பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு அர்ச்சனை
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
* சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் வழிபாடு

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar