ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய அடியவர்களை நால்வர் என குறிப்பிடுவர். இவர்களை சிவபெருமான், ‘பாலை, சூலை, ஓலை, காலை’ தந்து நான்குவிதமாக ஆட்கொண்டதாக சொல்வர். * மூன்று வயது குழந்தையான ஞான சம்பந்தர் பசியால் அழுத போது சிவன் அம்மையப்பராகத் தோன்றி ‘பாலை’ கொடுத்து தேவாரம் பாட வைத்தார். * சிவ வழிபாட்டை மறந்து மனம் போல வாழ்ந்த நாவுக்கரசருக்கு ‘சூலை’ என்னும் வயிற்று நோயைக் கொடுத்து ஆட்கொண்டார். * முதியவர் வடிவில் வந்த சிவன், சுந்தரரைத் தன் அடிமை என்று சொல்லி அதற்கான சாட்சியாக ‘ஓலை’(அடிமை சாசனம்) காட்டி ஆட்கொண்டார். * குருநாதராகத் தோன்றிய சிவன் மாணிக்கவாசகரின் தலையில் தன் ‘காலை’ (திருவடியை) வைத்து தீட்சை அளித்து ஆட்கொண்டார்.