சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள் கிழமையாக இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோயில் அக்னி கோயில் அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை, அக்னிக்குரிய கிரகம் அங்காரகன். ஆகவே இந்த கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என புராணங்கள் கூறுகிறது.